Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்! – தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:42 IST)
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து கைப்பற்றி மீண்டும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தெய்வத் தமிழ் பேரவை பத்திரிக்கை சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பே.மணியரசன் ”ஜக்கி வாசுதேவின் அறநிலையத்துறையை கலைக்கும் முயற்சி ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நோக்கங்களை ஒத்ததாக உள்ளது. மேலும் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையம் சட்டத்திற்கு புறம்பாக மலைப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்களது வழிபாட்டு முறை தமிழ் சிவநெறி-திருமால் நெறிக்கு புறம்பாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே அவரது ஈஷா மையத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments