Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (15:52 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அமைச்சர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
 
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது காவலர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்