நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

Siva
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (07:50 IST)
சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் பணிகள் காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 27 முதல் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும் நிலையில், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாற்று இடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளன. 
 
தடம் எண். 21, 41D, S17, 49K மற்றும் S5 ஆகியவை மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கும், தடம் எண். 49F பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், தடம் எண். 12M மற்றும் 5B ஆகியவை லஸ் கார்னர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. 
 
மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் முதியவர்களுக்கான இலவசப் பயண டோக்கன்களைப் பெற விரும்புவோர் இனி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லலாம். 
 
இந்த மாற்றம் குறித்த விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி தமிழக போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிம் முனீர் ஒரு மனநலமில்லாதவர்: இம்ரான்கான் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

மகளிர் உரிமை தொகை கொடுப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.. ஆயிரக்கணக்கோர் வேலைநீக்கம்?

இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

நான் இந்தியாவுக்கு வந்ததே இல்லை: ராகுல் காந்தி கூறிய பிரேசில் மாடல் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments