Publish Date: Thu, 08 Dec 2022 (08:06 IST)
Updated Date: Thu, 08 Dec 2022 (08:08 IST)
சென்னையிலிருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டோஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் நாளை இரவு மாண்டோஸ் புயல் ஸ்ரீஹரிக்கோட்டா மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
இந்த நிலையில் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.