பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபர் கைது

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (17:17 IST)
புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்மக்குடி தாலுகாவில் உள்ள வாணக்கன்காடு  என்ற ஊராட்சி பகுதியில், சமீபத்தில், பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில்,60  நிமிடத்தில் ஒரு நபர் பத்து பீர் குடிக்க வேண்டும் என்றும் சைடிஷ் ஆக மீன் வருவல் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, நுழைவு கட்டணம் 1000 ரூபாய் எனவும்,  36 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இப்போட்டியில், முதல் பரிசு 5000 ரூபாய் என்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பீர் குடிக்கும் போட்டி பற்றி போஸ்டரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணேசமூர்த்தி என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments