Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் வந்த ஏடிஎம் அலாரம்… சென்று பார்த்த போலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:07 IST)
வேலூர் மாவ்ட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர் ஒருவர் உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவில் ஒரு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து நேற்று முன் தினம் 12.25 மணிக்கு அலார சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு போலிஸார் விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

‘இதையடுத்து போலிஸார் வங்கி ஊழியர்கள் வரவழைத்து அலாரத்தை நிறுத்தினர். அங்கிருந்த கேமராவில் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் இரவு 12 மணிக்கு ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை இரும்புக் கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளார். அலார சத்தம் கேட்டதும் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments