Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நெகட்டிவ்… ஆனாலும் பெற்ற தாயை வீட்டுக்குள் அனுமதிக்காக மகன் – அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:00 IST)
ஐதராபாத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மகன் மறுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் வசித்துவந்தவர் பாலாமணி. இவரது மகன் மின்சாரத்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தனது தாயாரை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பாத அவர் முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கே முழுவதும் குணமான அவரை மருத்துவமனை நிர்வாகம் அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளது.

ஆனாலும் அவரது மகன் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துள்ளார். கொரோனா காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் போக்கிடம் இல்லாத அந்த அம்மா, வீட்டுக்கு வெளியே உள்ள காலியிடத்தில் தங்கியுள்ளார். இது சம்மந்தமாக செய்திகள் சமுகவலைதளங்களில் பரவவே, அவரது மகன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று தலைமறைவாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments