Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கு வரவேண்டும்: செல்போன் டவரில் ஏறி டிரைவர் போராட்டம்

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (13:09 IST)
கரூரில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வர சொல்லி, லாரி டிரைவர் மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.




கரூர் அருகே தான்தோன்றிமலை பாரதிதாசன் நகர் முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்த வடமலை என்பவரது மகன் அன்பழகன், 45. லாரி டிரைவரான இவர் நேற்று இரவு, 7:15 மணிக்கு வீட்டுக்கு அருகில் இருந்த மொபைல் போன் டவரில் ஏறி,  தமிழக முதல்வர் ஓபிஎஸ் தான் முதல்வராக தொடரவேண்டும் என்றும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நகர அ.தி.மு.க., செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் வர வேண்டும், இல்லையேல் கடந்த சட்டசபை தேர்தலில் போட்ட ஓட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தகவல் அறிந்த கரூர் டவுன் டி.எஸ்.பி., கும்மராஜா, பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு, அமைச்சருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர் உன் மொபைல் போனில் பேச முயற்சி செய்கிறார், போனை ஆன் செய்து பேசு, என மைக் மூலம் போலீசார் அன்பழகனுக்கு தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்தால் தான் இறங்குவேன் என, அன்பழகன் மொபைல் போன் டவரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், தான்தோன்றிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments