Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க எந்த பத்திரிக்கை?: விஜயகாந்த் பாணியில் செய்தியாளரை மிரட்டிய சசிகலா!

நீங்க எந்த பத்திரிக்கை?: விஜயகாந்த் பாணியில் செய்தியாளரை மிரட்டிய சசிகலா!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (13:01 IST)
கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை நேற்று இரண்டாவது முறையாக சசிகலா சென்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நீங்க எந்த பத்திரிக்கை என கோபமாக கேட்டார்.


 
 
நேற்று சசிகலா கூவத்தூர் சொகுசு விடுதிக்கு சென்று எம்எல்ஏக்களிடம் பேசினார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் செல்போன், கேமரா போன்றவை குண்டர்களால் எடுத்து வைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
 
பெரும் சலசலப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய சசிகலா பின்னர் அவர்கள் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் கோபம் அடைந்த சசிகலா நீங்க எந்த பத்திரிக்கை என திருப்பி கேட்டார்.
 
பின்னர் உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்குமோ என்னவோ? அதனாலத்தான் அப்படி கேட்கிறீர்களோ என்று கோபமாக கூறினார். மேலும் சசிகலா செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடமே திரும்பி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் செய்தியாளர்கள் முகம் சுளித்தனர்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments