Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதையில் ஆடி காரை விட்டுவிட்டு ஆம்புலன்ஸை எடுத்து சென்ற நபர்!

போதையில் ஆடி காரை விட்டுவிட்டு ஆம்புலன்ஸை எடுத்து சென்ற நபர்!
, திங்கள், 18 டிசம்பர் 2017 (12:53 IST)
நோயாளி ஒருவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு தனது ஆடி காரில் அழைத்து வந்த நபர் ஒருவர், போதையில் திரும்பி செல்லும் போது ஆடி காரை விட்டுவிட்டு ஆம்புலன்ஸை எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
 
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த நிக்கல்சன் என்பவர் தனது உடல்நிலை சரியில்லாத உறவினர் ஒருவரை அப்போலோ மருத்துவமனைக்கு தனது ஆடி காரில் அழைத்து வந்துள்ளார். காரை வெளியே நிறுத்திவிட்டு மருத்துவமனையில் அவரை அனுமதித்த பிறகு மீண்டும் வெளியே வந்த நிக்கல்சன் தனது ஆடி காரை விட்டுவிட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸை எடுத்து சென்றுள்ளார்.
 
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸை காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தேட ஆரம்பித்துள்ளது. ஆம்புலன்ஸ் இல்லாததால் அப்போலோ நிர்வாகம் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
 
இதனை அறிந்த நிக்கல்சன் அவசர அவசரமாக ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு விரைந்துள்ளார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் போதையில் இருந்ததால் இந்த சம்பவம் நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் லைவ்: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்...