Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவழக்கில் தலைமறைவு… 26 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கண்டுபிடிப்பு!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (16:16 IST)
புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் குற்ற வழக்கு ஒன்றுக்காக 26 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் 1989 ஆண்டு ஒரு பெண்ணை கடத்திச் செல்ல முயன்றதாக 17 பேர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சந்திரசேகரன் என்பவர் 1993 ஆம் ஆண்டு வழக்கில் ஆஜாராகாமல் தலைமறைவானார்.

அதிலிருந்து அவரைப் போலிஸார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். இந்த நிலையில் சந்திரசேகர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதாக திருநள்ளாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்று அவரைக் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். இதன் மூலம் 26 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments