Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் – அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் எடுத்த முடிவு !

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (14:33 IST)
தான் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் அது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், பெராணி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர் நேற்று முன் தினம் கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டில் இருந்த ரஸ்க் ஒன்றில்  கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உற்றுப்பார்த்ததில் அது இரும்பு போல்ட் எனத் தெரிந்துகொண்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக இது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர் இது சம்மந்தமாகப் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடமும் அந்த ரஸ்க்கில் உள்ள இரும்புத்துண்டைக் காட்டினார். குழந்தைகள் சாப்பிடும் உணவான ரஸ்க்கில் இப்படி அலட்சியமாக இருக்கும் நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி அவர் வற்புறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments