Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை – கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான 3 குழந்தைகள்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:44 IST)
சென்னையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் கணவனும் அதே முடிவை எடுத்துள்ளார்.

சென்னையக்கு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் தியாகராஜன் மற்றும் சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளன. சத்யா சில ஆண்டுகளாக நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால்  கடந்த 11 ஆம் தேதியன்று, அவர் வீட்டு சமையலறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது கணவரும் சத்யா இறந்த அதே இடத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அவர்களின் மூன்று குழந்தைகளும் இப்போது அனாதையாகியுள்ளனர். இது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

அடுத்த கட்டுரையில்
Show comments