Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர்களை அறிவிக்க துவங்கிய நாம் தமிழர்!!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:32 IST)
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளையே துவங்கிவிட்டது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக சமீஅத்தில் தான் தேர்தல் வேட்பாளரையே முடிவு செய்துள்ளது. 
 
ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளையே துவங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என அறிவித்து, 117 சட்டமன்ற தொகுதியில் ஆண் வேட்பாளர்களும், 117 சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார்கள். 
 
ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓப்புதலுடன், அந்த அந்த மாவட்ட தலைவர்களே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் கிராமங்கள் தோறும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments