15 வயது சிறுமியைத் திருமணம் செய்த 43 வயது நபர் – அதிரவைக்கும் பின்னணி!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (10:05 IST)
தேனி அருகே 15 வயது சிறுமியை 43 வயது நபர ஆசைவார்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் வலசத்துறையில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி இறந்துவிடவே இரண்டாவது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில் தனது வீட்டருகே வசித்து வரும் 15 வயது சிறுமியிடம் பழக ஆரம்பித்துள்ளார் கிருஷ்ணன். அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரை பழனிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க தேடுதலில் ஈடுபட்ட போலிஸார் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்துக்காக கிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments