Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
Murder

Mahendran

, வியாழன், 15 மே 2025 (12:04 IST)
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை வெட்டி கொலை செய்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
 
இந்த நிலையில், புவனேஸ்வரிக்கும் விஜய் என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, புவனேஸ்வரி தனது கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
இதை அறிந்த பாலு, தனது மனைவியின் கள்ளக்காதல் குறித்து ஆத்திரம் அடைந்தார். ஒரு கட்டத்தில் நேராக மாமியார் வீட்டிற்கு சென்று, அங்கு தனது கர்ப்பிணி மனைவி புவனேஸ்வரி, மாமனார் அண்ணாமலை மற்றும் மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
 
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
விசாரணையின் போது, "தன்னுடைய மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக தான் வெறி பிடித்து மூவரையும் வெட்டி கொலை செய்தேன்," என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவம், ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!