Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலுக்குள் இருந்து பாய்ந்த பாம்பு! அறண்டு போன அதிகாரிகள்!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (13:37 IST)
மலேசியாவிலிருந்து பாம்பு முதலிட்ட கொடிய விஷமுள்ள உயிரினங்களை கடத்தி வந்த நபர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த இரண்டு நபர்கள் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கண்ட சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்த பார்சலில் என்ன இருக்கிறது என்று விசாரித்தபோது, அதில் சாக்லேட் மற்றும் விளையாட்டு பொருட்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

பார்சலை சோதித்து பார்த்துவிட முடிவு செய்த அதிகாரிகள் பார்சலை திறந்திருக்கிறார்கள். சடாரென உள்ளிருந்து இரண்டு பாம்புகள் வெளிய பாய்ந்து தரையில் விழுந்து ஓடியிருக்கின்றன. அவற்றை விமான நிலைய ஊழியர்கள் சிலர் குச்சிகளை பயன்படுத்தி பிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து சோதனை செய்ததில் கொடிய விஷமுடைய பாம்புகள், மரப்பல்லிகள், உடும்புகள் போன்ற ஜந்துக்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து விசாரித்தபோது இவற்றை மலேசியாவில் உள்ள ஒருவர் கொடுத்ததாகவும் இவற்றை சென்னையில் ஒருவரிடம் கொடுத்தால் பணம் கொடுப்பதாக கூறியதாகவும் சிக்கியவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதை கடத்த முயற்சித்தது யார்? என்ன நோக்கத்திற்காக? என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடிய ஜந்துகள் மீண்டும் மலேசியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments