Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50,000 கடன் வாங்கி 44 ஓட்டு தான்... விரக்தியில் வேட்பாளர் தற்கொலை!

Advertiesment
மக்கள் நீதி மய்யம்
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:06 IST)
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டில் போட்டியிட்ட மணி தூக்கிட்டு தற்கொலை. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இதில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் மற்ற கட்சிகளில் சொற்ப வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டில் போட்டியிட்ட மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தேர்தல் செலவுக்காக ரூ.50,000 கடன் வாங்கி செலவு செய்தும் வெறும் 44 வாக்குகள் மட்டும் வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய ஜெட்டை வீழ்த்தியது உக்ரைன் அரசு!!