Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைதான் கருணாநிதி அன்றே சொன்னார்! திமுக – காங் குறித்து அமைச்சர் பாண்டியராஜன்!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (14:34 IST)
திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே சிறு வாதம் எழுந்த நிலையில் அதுகுறித்து அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக கூட்டணி குறித்து வெளியிட்ட அறிக்கையால் திமுக- காங்கிரஸ் இடையே சிறு விவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து நேற்று கே.எஸ்.அழகிரியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது உடைந்த கண்ணாடி போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு அதிமுக அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து பேசிய போது ”கூடா நட்பு கேடாய் முடியும் என திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து கருணாநிதி அப்போதே கூறியுள்ளார். சுயமரியாதையுடன் திமுகவோடு கூட்டணியில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments