டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது: மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து..!

Mahendran
திங்கள், 26 மே 2025 (12:09 IST)
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டாஸ்மாக் ஊழல் குறித்து பேட்டி அளித்ததற்காக இரண்டு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து, அதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோதம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவே அரசே மது விற்பனை செய்கிறது. ஆனால் அதில் கூட ஊழல் என்பதை அனுமதிக்க முடியாது. ஊழல் குறித்து பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை பார்க்கும்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடப்பது மட்டும் தெரிகிறது," என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக, டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் ஊழியர் செல்வம் ஆகிய இருவரும் இணைந்து வசூல் வேட்டை நடத்துவதாக, இரண்டு ஊழியர்கள் பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டிக்கு பிறகு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments