Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்புக்கட்டண ரயில்: ரயில்வே அறிவிப்பு..!

Advertiesment
Train
, புதன், 12 ஏப்ரல் 2023 (12:09 IST)
குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நடைபெற உள்ளதை அடுத்து மதுரையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
 
மதுரையில் இருந்து ஏப்ரல் 14-ந் தேதிமாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7.30 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள விராவல் சென்றடைகிறது. 
 
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
 
 இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதை அடுத்து தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: ஏப்ரல் 20ஆம் கதவடைப்பு போராட்டம்..!