Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் அமர்ந்த பிறகு ரத்து அறிவிப்பு: ‘ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு கண்டனம்!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (09:13 IST)
விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பிறகு அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பயணிகளுக்கு பெரும் ஆத்திரத்தை அளித்துள்ளது. 
 
மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை கிளம்புவதாக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டு விமானத்தில் பயணத்திற்காக ஏறி உட்கார்ந்து இருந்தனர்.
 
இந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்லும் பயணிகள் விமானம் நிறுத்தப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே முதல் நாள் இந்த விமானம் இதே காரணத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது நாளாகவும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
அதுமட்டுமின்றி விமானத்தில் அமர்ந்த பிறகு ரத்து என்ற அறிவிப்பு வெளியானதால் விமான நிலைய ஊழியர்கள் உடன் பயணிகள் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments