Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கைக் கொளுத்திய மர்மநபர்கள்- மதுரையில் பரபரப்பு!

Webdunia
சனி, 9 மே 2020 (15:13 IST)
மதுரையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றை மர்மநபர்கள் சிலர் கொளுத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என அறிவித்தது.

இதையடுத்து மதுரை தபால் தந்தி நகரிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடினர். டாஸ்மாக் கடையில் பற்றிய தீ மளமளவென பக்கத்துக் கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் கூறப்பட, தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments