Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு கொரோனா ஆசாமி தப்பியோட்டம்: போலீஸார் தேடுதல் முயற்சி!

Webdunia
சனி, 9 மே 2020 (15:08 IST)
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில் கோயம்பேடு ஹாட்ஸ்பாட் தொடர்புடைய நபர் தப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமா சென்னையில் கோயம்பேடு பகுதி மூலமாக கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து கோரோனா பாதிப்புகள் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 7ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அந்த நபர் மருத்துவமனையை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

தப்பி சென்றவரின் முகவரியை வைத்து விசாரித்ததில் அவர் போலியான முகவரியை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து மாயமான நபரை தேடும் பணியை திருவெல்லிக்கேணி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சென்னை பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments