மீண்டும் இயங்குகிறது மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (07:21 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மதுரை - செங்கோட்டை ரயில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் மீண்டும் இயங்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ரயில் இயங்கும் நேரம் மற்றும் நிற்கும் ரயில் நிலையங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம், மதுரை செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30 முதல் இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையிலிருந்து 7:10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 7.10 மணிக்கு வந்தடையும். 
 
இந்த ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு முக்கியம் இல்ல.. தளபதியை பார்ப்பதுதான் முக்கியம்!.. தவெக மீட்டிங்கில் பெண்கள் பேட்டி!...

இறந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்திய பின்னர் உயிருடன் வந்த நபர்.. என்ன நடந்தது?

கழுதையின் உதவியால் நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்.. பிடிபட்டது எப்படி?

லிப்ஸ்டிக்கால் எழுதிய வெடிகுண்டு மிரட்டல் செய்தி.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

தவெக - காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்காது.. ஆனால் திமுகவை தோற்கடித்துவிடும்: அரசியல் விமர்சகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments