மதுரை ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சி – 5 கடைகளுக்கு நோட்டீஸ்

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:26 IST)
மதுரையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இன்று மதுரையில் உள்ள ஷவர்மா விற்பனை செய்யும் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 5 கடைகளில் கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரிய வந்துள்ளது.

10 கிலோ காலாவதியான கோழி இறைச்சியை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் 5 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments