Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்கு சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த போலீஸ்! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:46 IST)
மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண்ணை போலீஸே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இளம்பெண் தனது சக கடை ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளருடன் செல்லூரில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு படம் பார்க்க சென்றுள்ளார்.

படம் முடிந்து இரவு 1 மணியளவில் இளம்பெண்ணை அவரது வீட்டில் விடுவதற்காக கடை உரிமையாளர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது வழிமறித்த போலீஸார் அவர்களை விசாரித்துள்ளனர். பின்னர் அந்த போலீஸ், இளம்பெண்ணை தான் பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடன் ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவரும் பெண்ணை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து காவலர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்