Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வாகனம்! – காவல் வாகனத்துக்கு அபராதம் விதித்த காவல்துறை!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (15:02 IST)
மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு காவல்துறையே அபராதம் விதித்துள்ளது.

மதுரை கீழ ஆவணி மூல வீதி சாலை ஒன்றில் வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காவல் துறை வாகனம் ஒன்று நின்றுள்ளது. அதை புகைப்படம் எடுத்த பொதுமக்கள் சிலர் அதை மதுரை காவல் நிலையத்திற்கு அனுப்பி புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த காவல் வாகனம் தேனி சமூக நீதி தீண்டாமை பிரிவு டிஐஜி உடையது என தெரிய வந்துள்ளது.

எனினும் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் நிறுத்தப்பட்டதற்காக டிஎஸ்பி வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments