Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (07:39 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 2 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
 
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்படும்  தொடர் விபத்துகளால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments