பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்கள் மாயம்! – தேடும் சுகாதாரத்துறை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:36 IST)
பிரிட்டனில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த சிலர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த 80 பேரில் 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீத 4 பேரை தனிமைப்படுத்த அவர்களது முகவரியை அணுகியபோது அவர்கள் தவறான முகவரியை அளித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் மாயமான 4 பேரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments