Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீறும் காளைகள்... துவங்கியது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு!

சீறும் காளைகள்... துவங்கியது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு!
, சனி, 15 ஜனவரி 2022 (08:04 IST)
இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தொடங்கியது. 

 
தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய மாடுபிடி போட்டியான ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலம் வாய்ந்தது. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 13 ஆம் துவங்கி தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை பல்கலை பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!