Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்வே: மதுரை எம்பி வரவேற்பு

Webdunia
புதன், 18 மே 2022 (07:40 IST)
தமிழகத்தில் 5 முன்பதிவில்லா பொது பெட்டிகள் உடைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதற்கு மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தெற்கு ரயில்வேயில் முன்பு ஓடிக்கொண்டிருந்த சாதாரண பயணி வண்டிகளை இயக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.
 
இப்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர்- கொல்லம் ;மதுரை- இராமேஸ்வரம்; திருச்செந்தூர்- திருநெல்வேலி; செங்கோட்டை- திருநெல்வேலி  ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லா பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் 30 .5 .2022 முதல் இயக்கிட தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அதற்கான உத்தரவு 17 .5 .22 வெளியிடப்பட்டுள்ளது .
 
அத்துடன் கோயமுத்தூர்- மேட்டுப்பாளையம் இடையே 23. 5 .2022 முதல் விரைவு வண்டி பொது பெட்டிகளுடன் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது .இதுவும் வரவேற்கத்தக்கதே. இது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அமைந்துள்ளது.
 
எனினும் சாதாரண கட்டணத்தில் வண்டிகள் இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments