Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 அல்ல, 14 கேட்கவும் எங்களுக்கு உரிமை உண்டு: பாராளுமன்றத்தில் மதுரை எம்பி ஆவேசம்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:53 IST)
நான்கு அல்ல 14 கேட்பதற்கு கூட எங்களுக்கு உரிமை இருக்கிறது என பாராளுமன்றத்தில் மதுரை எம்பி வெங்கடேசன் காட்டமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்ச்சியில் மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் பேசியபோது, ‘மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் 
 
இந்த நிலையில் ’பல வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே மூன்று சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் போது மதுரைக்கு கேட்பது என்ன நியாயமா? எனவே தர முடியாது என விமான துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்
 
இதனால் ஆவேசமான மதுரை எம்பி வெங்கடேசன் கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய ஜிஎஸ்டி வரி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம் என்றும் நாங்கள் 4 அல்ல, 14 கேட்க உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: 30 குண்டுகள் வீட்டை நோக்கி பாய்ந்ததால் பரபரப்பு..!

திடீரென பத்மநாப சுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. என்ன காரணம்?

நாய்களோ அப்பாவி.. இரக்கமோ நமது மொழி.. சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்..!

பாஜக ஆளும் மாநிலங்கள்ல போய் கம்பு சுத்துங்க! - ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments