Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை; மருத்துவக் கல்லூரி டீன் மீது நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:41 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரியில் புதிதாக சேர்ந்த 250 மாணவர்கள் கல்லூரியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது மாணவர்கள் உறுதிமொழி ஏற்றபோது இப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழியை வாசித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமண்யன் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் டீன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது கல்லூரி டீன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments