Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய உயர்நீதிமன்றம் தடை

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (15:08 IST)
தமிழகத்தில் ஆதினங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர்  இருந்த போது 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னை தானே அறிவித்து கொண்டது சட்டத்துக்கு விரோதமான செயல் என அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும்  அந்த மனுவில், நித்யானந்தா மதுரை ஆதீன மடம் உள்பட பல்வேறு சைவ மடங்களை சட்டவிரோதமாக கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்து  வருகிறார். இதனால் ஆதீன மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும்,  நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கில் இறுதி  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்ட  கோயில்களிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எந்த ஆதினமாக இருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்டால் அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments