Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதிகையில் சமஸ்கிருதம்; புடிக்கலைனா டிவியை ஆப் பண்ணுங்க! – உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு

பொதிகையில் சமஸ்கிருதம்; புடிக்கலைனா டிவியை ஆப் பண்ணுங்க! – உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு
, திங்கள், 18 ஜனவரி 2021 (16:47 IST)
பொதிகையில் சமஸ்கிருதத்தில் செய்திகள் ஒளிபரப்புவது குறித்த வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூர்தர்ஷனின் தமிழ் சேனலான பொதிகையில் தமிழை தொடர்ந்து சமஸ்கிருதத்திலும் செய்திகள் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை நிறுத்த கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற கிளை ”மனுதாரர் சமஸ்கிருத செய்தியை பார்க்க விரும்பவில்லை என்றால் டிவியை ஆப் செய்து வைக்கலாம் அல்லது வேறு சேனலுக்கு மாற்றலாம். ஏகப்பட்ட முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இதுபோல நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலைக்கும் தயங்காத ஜெகத்ரட்சகன்: என்ன ஆச்சு திமுகவில்..???