Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்ஜாமீனா? கைதா? கமலின் நிலைமை திங்கட்கிழமை தெரியும்!

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (20:04 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனுவின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளிவரவிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் பரபரப்பில் உள்ளனர்.
 
இந்து தீவிரவாதம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து தெரிவித்த கமல்ஹாசனுக்கு எதிராக தமிழகத்தில் மட்டும் இதுவரை 76 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவின் இருதரப்பு வாதமும் முடிந்துவிட்ட நிலையில் வரும் 20ஆம் தேதி அதாவது திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பை பொருத்தே கமல் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது தெரிய வரும்
 
இந்த் நிலையில் தான் கைதுக்கு அஞ்சவில்லை என்றும், இந்து தீவிரவாதம் குறித்து தான் கூறிய கருத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments