Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்ஜாமீனா? கைதா? கமலின் நிலைமை திங்கட்கிழமை தெரியும்!

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (20:04 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனுவின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளிவரவிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் பரபரப்பில் உள்ளனர்.
 
இந்து தீவிரவாதம் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது கருத்து தெரிவித்த கமல்ஹாசனுக்கு எதிராக தமிழகத்தில் மட்டும் இதுவரை 76 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவின் இருதரப்பு வாதமும் முடிந்துவிட்ட நிலையில் வரும் 20ஆம் தேதி அதாவது திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பை பொருத்தே கமல் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது தெரிய வரும்
 
இந்த் நிலையில் தான் கைதுக்கு அஞ்சவில்லை என்றும், இந்து தீவிரவாதம் குறித்து தான் கூறிய கருத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments