Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:22 IST)
தமிழகத்தில் பொங்கலை ஒட்டி சேவல் சண்டைக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை பிரபலமானதாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி கரூர், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதிக்கபட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், சேவல் சண்டை குறித்த தமிழக அரசின் நிலைபாட்டை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிட்காயின் மதிப்பு சரிவுக்கும், கஜகஸ்தான் போராட்டத்துக்கும் என்ன தொடர்பு?