Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்! – மதுரையில் அமல்!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (09:38 IST)
தமிழ்நாட்டில் நேற்று முதலாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்கு பின் தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று நேரடியாக மக்களுக்கு அபராதம் விதிக்காமல் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு மட்டுமே வந்தது. இந்நிலையில் இன்று முதல் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பல நகராட்சி, மாநகராட்சிகளும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments