Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகையில் இறங்கும் கள்ளழகர்! மதுரையில் உள்ளூர் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:44 IST)
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களிலும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. பல ஊர்களிலும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம், திருவிழாக்கள் நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வாக பார்க்கப்படுவது மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.

இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மதுரை செல்வது வாடிக்கை. இந்த ஆண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனால் மே 5 மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மதுரை ஆட்சியர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments