Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகையில் இறங்கும் கள்ளழகர்! மதுரையில் உள்ளூர் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:44 IST)
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களிலும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. பல ஊர்களிலும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம், திருவிழாக்கள் நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வாக பார்க்கப்படுவது மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.

இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மதுரை செல்வது வாடிக்கை. இந்த ஆண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனால் மே 5 மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மதுரை ஆட்சியர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments