Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க சான்றிதழ் பெற வேண்டும்: அதிரடி உத்தரவு..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (10:28 IST)
மதுரை சித்திரை திருவிழாவில் நீர் மோர் பந்தல், அன்னதான கூடங்கள் அமைக்க உணவுப்பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் சென்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி அல்லது பதிவுச் சீட்டு சான்றிதழை பெற வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதங்கள் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிலையில்  அவர்களுக்கு தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் அன்னதான உணவு கூடங்கள் அமைக்கப்படும். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு மோர் பந்தல் அன்னதான கூடங்கள் அமைக்க கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் சான்றிதழ் இல்லாமல் பிரசாதம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments