18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (12:01 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் முன் 18 எம்.எல்.ஏக்கள் ஆஜராகாததால் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.



 
 
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடரந்தது.
 
இன்றைய விசாரணையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி ரவிச்சந்திரபாபு செய்துள்ளார். எனவே இனிமேல் இந்த 5 வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments