ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை அலுவலகம்..!

Siva
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (14:06 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கு தொடர்பாக, அவரது வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், தீபா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி சுமார் ₹36 கோடி என வருமான வரித்துறை மதிப்பிட்டது. இந்த தொகையை செலுத்தும்படி ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செலுத்த வேண்டிய வரித் தொகை ₹36 கோடியில் இருந்து ₹13 கோடியாக குறைத்து திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், தீபா தொடர்ந்திருந்த இந்த வழக்கு செல்லாது என கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments