Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பரவி வரும் ”மெட்ராஸ் ஐ”..

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (09:51 IST)
தமிழகம் முழுவதும் ”மெட்ராஸ் ஐ” நோய் பரவி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பருவமழை காலங்களில் மெட்ராஸ் ஐ எனப்படும் இளஞ்சிவப்பு கண் நோய் வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது பருவமழை காலம் ஆரம்பித்திருப்பதால் தமிழகத்தில் சென்னை உடபட ஆங்காங்கே “மெட்ராஸ் ஐ” யால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எலும்பூர் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தினமும் 10 முதல் 20 பேர் எலும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தனிதனியே கைக்குட்டைகளும் , தனி படுக்கையும் பயன்படுத்துவதன் மூலம் இதை மற்றவர்களும் தவறாமல் தடுக்கலாம் என கூறுகிறார்.

”மெட்ராஸ் ஐ” பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வழியும் திரவத்தால் தான் மற்றவருக்கு இந்த நோய் பரவுகிறது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments