Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமி வன்கொடுமை; குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தகர்ப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:19 IST)
மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் ஜேசிபி எந்திரம் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நைகர்ஹி என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு 16 வயது சிறுமியும், அவரது நண்பரும் சென்றுள்ளார்கள். கோவிலுக்கு சென்று விட்டு அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களை 6 பேர் கொண்ட இளைஞர் கும்பல் மறைத்துள்ளனர்.

அவர்களை மிரட்டி அருகே இருந்த அருவி அருகே அழைத்து சென்ற அவர்கள் அங்கு அந்த சிறுமியின் உடன் வந்த நண்பரை தாக்கிவிட்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.

ALSO READ: கடலூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளிகளான 6 பேரை தேடிய போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அதில் இருவர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் அதேசமயம் அவர்களுக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றவாளிகள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments