80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு; 34 பேருக்கு ஒமிக்ரான்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (09:10 IST)
தமிழகத்தில் 16வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் நிலையில் தடுப்பூசி இருப்பு குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த செப்டம்பர் முதலாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி முகாம் குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 80 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசின் கையிருப்பில் உள்ளது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இன்று 2.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒமிக்ரான் குறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் 34 பேர் பாதிப்பு. 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடங்கியது

ஆம்னி பேருந்து தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நிதியுதவி அறிவிப்பு

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்.. கையில் எழுதி வைத்து தற்கொலை.

கரூர் துயர சம்பவம்.. 41 குடும்பத்தினர்களை சென்னையில் சந்திக்கின்றாரா விஜய்?

நண்பன் என்றால் நண்பனாக இருப்போம், துரோகி என்றால் காலில் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments