Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கடைகள்! – பல லட்சம் பொருட்கள் சேதம்!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (08:58 IST)
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு திடீரென அந்த கடைகளில் ஒன்றான பெயிண்ட் விற்கும் கடை திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதனால் விடிய விடிய தீ பற்றி எரிந்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments