காலையில் அமமுகவில் இருந்து நீக்கம்.. மாலையில் அதிமுகவில் இணைப்பு..!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:48 IST)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா சேகர் இன்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் எடப்பாடி பழனிச்சாமி முன் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை அறிவித்து இருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மா சேகர் சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments