Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறைக்கு பின் கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:40 IST)
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் கலை கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் கலை கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்த பின்னர் கலை கல்லூரிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சற்று தாமதமாக கல்லூரிகள் தொடங்கும் என்றும் ஜூன் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்திற்குள் அட்மிஷன்கள் முடிக்கப்பட்டு ஜூன் இறுதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments