Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
, வியாழன், 1 ஜூன் 2017 (01:03 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவர் சூரஜ் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.



 


சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் சூரஜ் மாட்டிறைச்சி விருந்தளித்தார். அப்போது சுத்தமான சைவம் சாப்பிடும் ஒரு பிரிவினர்களை மாட்டிறைச்சி சாப்பிடும்படி சூரஜ் வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பிரிவினர் சூரஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் ஐஐடி மாணவர்கள் பலர், சூரஜ் மேல் தான் தவறு என்று பதிவு செய்து வரும் நிலையில் திமுக செயல் தலைவர் சூரஜை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இடையிலான இந்த பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு